பற்றி எரிந்த கோவில்!! பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!! பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

 
பற்றி எரிந்த கோவில்

இன்று ஸ்ரீராம நவமி உலகம் முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வைணவ ஆலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தனகு மண்டலத்தில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தில் பெரும் விபத்து ஏற்பட்டது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 
தனகு மண்டலம் துவாவில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலில் ஸ்ரீராமநவமி விழா கோலாகலமாக நடந்து வருகிறது.


கோடை காலம் என்பதால் பக்தர்களின் வருகைக்காக பனை ஓலை கொண்டு நிழற்பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென பந்தல் தீப்பற்றி எரிந்தது.அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் தீயானது கோவில் முழுவதும் பரவியது.

பற்றி எரிந்த கோவில்

இதனால் கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினை சேர்ந்த ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web