வேன் மோதி கோர விபத்து... கல்லூரி மாணவர்கள் 2 பேர் உடல்நசுங்கி பலியான சோகம்!

கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் 19 வயது பாலாஜி . வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது திருப்பதி . இருவரும், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு-ஈரோடு ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில், பிசிஏ 2ம் ஆண்டு படித்து வந்தனர். செமஸ்டர் தேர்வு எழுதி விட்டு, சொந்த ஊரான கரூருக்கு, நேற்று மாலை டூவீலரில் சென்றனர். டூவீலரை திருப்பதி ஓட்டிச்சென்றார்.
சித்தாளந்தூர் அருகே காட்டுபாளையம் பிரிவு ரோடு பக்கம் டூவீலர் சென்று கொண்டிருந்தபோது திரில் வந்த சரக்கு வாகனம், எதிர்பாராத விதமாக டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படு காயமடைந்த இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மாணவர்கள் சென்ற டூவீலர் சுக்கு நூறாக நொறுங்கியது.
டூ வீலர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற சரக்கு வாகனத்தை, அங்கிருந்தவர்கள் விரட்டி சென்று தடுத்து நிறுத்தினர். அந்த வாகனத்தை ஓட்டி வந்த தேவனாங்குறிச்சி பகுதியில் வசித்து வரும் டிரைவர் ரமேஷை (30) பிடித்து திருச்செங்கோடு புறநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!