திருச்செந்தூா் கடலில் நீராடிக் கொண்டிருந்த குற்றவாளி கைது!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் கோயில் கடலில் குளித்து கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை கீழக்கூட்டுடன் காடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி (31). இவா் மீது தூத்துக்குடி, சிப்காட் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகள், சென்னை செங்குன்றத்தில் ஒரு கொலை வழக்கு, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கஞ்சா மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான முத்துப்பாண்டியை போலீசார் தேடி வந்தனா்.
இதனால் முத்துபாண்டி மொட்டை அடித்து அடையாளம் தெரியாத அளவில் சுற்றித் திரிந்துள்ளாா். இந்நிலையில் திருச்செந்தூா் சுப்பிரமணிய கோயிலுக்கு முத்துப்பாண்டி நேற்று முன்தினம் குடும்பத்துடன் வந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கடலில் குளித்துவிட்டு வெளியே வந்த முத்துப்பாண்டியை கோயில் காவல் நிலைய போலீசார் பிடித்தனா். அப்போது முத்துப்பாண்டியுடன் வந்த குடும்பத்தினா் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, முத்துப்பாண்டியை போலீசார் கோயில் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
பின்னர் அவரை கைது செய்து புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து ெசன்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தபோது முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்து அழைத்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!