வேற்றுமைகளை ஒதுக்கி அனைவரும் அமைதியாக வாழ பிரார்த்திப்போம்... நடிகர் அஜித் குமார்!

 
அஜீத்


 இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் பஹல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகள் ஏப்ரல்22ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த கோர தாக்குதலால் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் அஜித்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அஜீத்
ஏப்ரல் 21ம் தேதி  தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
 அஜீத்
இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் அஜீத் குமார் விரைவில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால், நாம் அனைவரும்  பாதுகாப்பாக இருக்கிறோம். அனைத்து மதங்களையும், சாதிகளையும் மதிக்க வேண்டும். நமக்குள் எந்த மோதலும் இருக்க கூடாது. வேற்றுமைகளை ஒதுக்கிவிட்டு, அமைதியாக வாழ அனைவரும் பிரார்த்திப்போம் என கூறினார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web