சென்னை அணியை வாங்கிய நடிகர் சூர்யா!
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. டி20, டி10 போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் டி10 தொடர் தற்போது இந்தியாவிலும் நடத்தப்பட இருக்கிறது. ஐஎஸ்பிஎல் பெயரில் நடத்தப்படும் இந்த தொடரில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
அந்த வகையில் 2024 ல் மார்ச் 2 முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐஎஸ்பிஎல் தொடரில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் தான் போட்டிபோட்டு வாங்கி போட்டு வருகின்றனர். மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கி இருந்தனர்.
இந்நிலையில், ஐஎஸ்பிஎல் தொடரில் கலந்து கொள்ளும் சென்னை அணியின் உரிமையாளர் யார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார். கொல்கத்தா அணியின் உரிமையாளர் குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர். 10 ஓவர்களை கொண்ட போட்டிகளாக இந்த ஐஎஸ்பிஎல் தொடர் நடத்தப்படும். இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள இருப்பவர்கள் தற்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!
மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!
மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!
மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!