நடிகர் விஜய் சினிமாவிலிருந்து விலகல்!! ரசிகர்கள் அதிர்ச்சி!!
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாகவே விஜய் நற்பணி இயக்க பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் அன்னதானம் வழங்க உத்தரவிட்டார். அதே போல் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவி பரிசுத் தொகை வழங்கி கௌரவித்தார். இவரது இந்த செயல்பாடுகள் அவர் விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது லியோ படப்பிடிப்பில் பிசியாக நடித்து வரும் விஜய் வெங்கட்பிரபுவுடன் அடுத்த படம் அனைத்தையும் 2024 மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு பிறகு திரையுலகில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க இருப்பதாகவும், அந்த காலகட்டத்தில் அரசியலில் களமிறங்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகளால் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் விஜய் தனது மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக மாற்றுவாரா இல்லை, தேர்தலின்போது ஒருவருக்கு ஆதரவு தெரிவித்து வாய்ஸ் கொடுப்பாரா? இல்லை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நிற்பாரா? என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால், அவரது நகர்வுகள் அப்படித்தான் இருக்கின்றது என அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் விஜய் சமீப காலமாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளையும் மூத்த அரசியல்வாதிகளையும் சந்தித்து, இது குறித்து விவாதித்து வருவதாகவும் ரகசிய தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றால், பணத்தை தண்ணியாக செலவு செய்ய வேண்டும் என அறிவுரை கூறியுள்ளனர்.
அதற்காகவே, தனது அடுத்த படமாக தளபதி 68 ல் நடிகர் விஜய் சம்பளமாக ரூ.200 கோடி பேசப்பட்டுள்ளது. இனிமேல் வருகின்ற படத்தில் அதுதான் சம்பளம் எனவும் இதே போல் வருடத்திற்கு 3 படங்கள் மட்டுமே. ஒரு படத்துக்கு ரூ.200 கோடி சம்பளம் விகிதம் வருடம் 3 படம் என்றால் ரூ.600 கோடி இதில், ரூ.500 கோடியை அரசியலுக்காக செலவு செய்வார் என மூத்த பத்திரிகையாளர் செய்யார் பாலு தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!