மருதமலையில் நடிகர் யோகிபாபு ... குவிந்த ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் முண்ணனி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் யோகி பாபு. அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிசியாக இருந்தாலும் அவ்வப்போது கோவிலுக்கு வந்து சாமி பார்க்க தவறுவதில்லை. கோவையின் ஜி.டி நாயுடு வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.
அதில் மாதவன் கதாநாயகனாகவும் , யோகிபாபு முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்கான படபிடிப்பு இன்று முதல் 2 நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக கோவை வந்த யோகிபாபு, மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் சாமி தரிசனம் செய்தார். இங்கு தான் ஒப்பந்தமாகியுள்ள புதிய படப்பிடிப்பின் கதைக் கோப்புகளை சாமியின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்தார். யோகிபாபு கோவைக்கு வரும்போதெல்லாம் மருதமலைக்கு தவறாமல் வந்து சாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!