பிரபல நடிகையைக் காரில் கடத்திய கணவர்... மகளைப் பறிக்க அரங்கேற்றிய நாடகம்!

 
சைத்ரா

கன்னடத் திரையுலகைச் சேர்ந்த துணை நடிகை சைத்ரா என்பவரை, அவரது கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஹர்ஷவர்தன் திட்டமிட்டுக் கடத்திச் சென்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுக்கு ஒரு வயது நிரம்பிய பெண் குழந்தை இருக்கும் நிலையில், குடும்பப் பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

நடிகை சைத்ரா தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கணவர் ஹர்ஷவர்தன் தனது மகளைத் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு சைத்ராவிடமும், அவரது குடும்பத்தினரிடமும் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவர்கள் அனுமதிக்காததால், ஹர்ஷவர்தன் ஆத்திரமடைந்தார். மகளைப் பறித்துக்கொள்ளும் நோக்குடன், தனது மனைவி சைத்ராவைக் கடத்தி மிரட்ட அவர் ஒரு சதித் திட்டத்தைத் தீட்டினார்.

சைத்ரா

தனது நண்பர் கவுசிக் என்பவர் மூலம் சைத்ராவை அணுகிய ஹர்ஷவர்தன், மைசூருவில் ஒரு படப்பிடிப்பு இருப்பதாகவும், அதில் நடிக்க வருமாறும் கேட்டுள்ளார். சைத்ரா சம்மதிக்கவே, அவர் கேட்ட ரூ. 20 ஆயிரம் முன்பணமும் கொடுக்கப்பட்டது. நேற்று காலை வீட்டுக்கே காரில் வந்து அழைத்துச் செல்வதாகக் கவுசிக் உறுதியளித்தார்.

நேற்று காலையில் சைத்ராவின் வீட்டுக்குக் கவுசிக் காரில் வந்து, சைத்ராவை அழைத்துச் சென்றார். அவர்கள் 'நைஸ் ரோடு' வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, அங்கு மற்றொரு காரில் வந்த ஹர்ஷவர்தன், கவுசிக்கின் காரை வழிமறிப்பதுபோல் நாடகமாடினார். பின்னர், அவர் தனது மனைவி சைத்ராவைத் தாக்கி, வலுக்கட்டாயமாகத் தன்னுடைய காரில் கடத்திச் சென்றார். சைத்ராவைக் கடத்திய பிறகு, ஹர்ஷவர்தன் சைத்ராவின் தாயாரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். "உங்கள் மகளைக் கடத்தி இருக்கிறேன், என் மகளை என்னிடம் கொடுத்து விடுங்கள், அப்போதுதான் உங்களது மகளைப் பாதுகாப்பாக விடுவிப்பேன்" என்று கூறி அவர் மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன சைத்ராவின் தாய், தனது இரண்டாவது மகள் மூலம் பேடராயனபுரா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நடிகையைக் கடத்திச் சென்ற ஹர்ஷவர்தனை வலைவீசித் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!