விஜயகாந்த் நினைவிடத்தில் கதறியழுத நடிகை ராதா... வைரலாகும் வீடியோ!

 
ராதா

இன்று காலை நடிகர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நடிகை ராதா கதறி அழுதது ரசிகர்களிடையே மேலும் துக்கத்தை அதிகரித்துள்ளது. நடிகர் ராதா, விஜயகாந்த் குறித்து பகிர்ந்த உருக்கமான நினைவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் மறைவு உலக தமிழர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில், அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், சூரி எனப் பலரும் நேரில் வந்தனர். இந்த நிலையில், நடிகர் விஜயகாந்துடன் 'அம்மன் கோவில் கிழக்காலே’, ‘மனக்கணக்கு’ உள்ளிட்டப் பல படங்களில் இணைந்து நடித்த நடிகை ராதா அவரது நினைவிடத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்பு, பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, “விஜயகாந்த் மிகவும் தன்மையான நபர். அவருடைய பிறந்தநாளின் போது தொலைபேசியில் பேசுவேன். சமீபத்தில், என்னுடைய மகள் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்கப் போயிருந்தேன்.

ராதா, விஜயகாந்த்

விஜயகாந்த் சாரை பார்க்க முடியவில்லை. பிரேமலதாவிடம் தான் கொடுத்திருந்தேன். அவ்வளவு கஷ்டத்திலும் கூட பிரேமலதா என் மகள் கல்யாணத்திற்கு முந்தின நாள் வந்திருந்தார். அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. நிச்சயம் அவருடைய ஆசீர்வாதத்தோடுதான் வந்திருப்பார். அவரை இந்நிலையில் வந்து பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. அவர் செய்த நல்ல விஷயங்கள் எப்போதும் நம்முடனேயே இருக்கும்” என கண்ணீர் மல்க பேசினார்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web