அடேங்கப்பா... ஒரு வருஷத்துல டாஸ்மாக் மூலம் ரூ.44,000 கோடி வருவாய்... ஆனாலும் நஷ்டத்துல தான் இயங்குது!
கோடிகளைக் குவித்து தருகிறார்கள் தமிழக குடிமகன்கள். ஆனாலும், டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்துல தான் இயங்கி வருகிறது என்பது நமக்கு அதிர்ச்சியை மட்டுமல்ல... வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. நஷ்டத்துல இயங்கி வருகிற ரயில் நிறுவனத்தை, விமான போக்குவரத்தை தனியாருக்குத் தருகிறோம். பி.எஸ்.என்.எல்.லை இழுத்து மூட ஆட்குறைப்பு செய்கிறோம். ஆனாலும், நஷ்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் நிறுவனத்தை குடி மகன்களின் அடிப்படைத் தேவையைத் தீர்க்க தொடர்ந்து நடத்தி வருகிறோம் என்றெல்லாம் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
கடந்த வருடத்தை விட இந்த நிதியாண்டில் தமிழகத்தில் மது விற்பனை சுமார் எட்டாயிரத்து 47 கோடி அதிகரித்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெற்ற போது, அவையில் கொள்கை விளக்கக் குறிப்பு வைக்கப்பட்டது. அதில் கடந்த 2018-19ம் ஆண்டில் ரூபாய் 4, 359 கோடி விற்பனை அதிகரித்த நிலையில், தற்போது 8,047 கோடி விற்பனை அதிகரித்துள்ளது.
மது விற்பனை குறித்து 2003-04 நிதி ஆண்டு முதல் 2022-23 நிதி ஆண்டு வரை 20 நிதியாண்டுகளுக்கான விற்பனை குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் சராசரி அளவை விட 8 ஆயிரத்து 47 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!