”கப்” முக்கியம் பிகிலு!! சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு புது கேப்டன் !!

 
எய்டன் மார்க்ரம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அனைத்து சீசனிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். ஆனால் இந்தாண்டு போட்டிக்கான ஏலத்தில் சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுதுதள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. 

எய்டன் மார்க்ரம்

16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இங்கிலாந்து வீரர் ஹேரி ப்ரூக்கை 13. 25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதே போல் மாயங்க் அகர்வால்(ரூ. 8.25 கோடி), ஆதில் ரஷீத் (ரூ. 2 கோடி), ஹென்றிச் கிளாசன்(ரூ. 5.25 கோடி), விவராந்த் ஷர்மா(ரூ. 2.6 கோடி) உள்ளிட்ட பல வீரர்களை ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது.

அடுத்த மாதம் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில் சன்ரைசர்ஸ் அணி, அணியின் கேப்டனை அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில் இன்று தென்னாப்பிரிக்கா அணியின் வீரரான எய்டன் மார்க்ரம் அணியின் கேப்டனாக அறிவித்துள்ளது. இவர் தென்னாப்பிரிக்கா டி20 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டத்தை வென்றார். தற்போது நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக அணியை வழிநடத்தி கோப்பையை வெல்வார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 

From around the web