செம ஜாலி... இன்று மாமல்லபுரத்தில் சுற்றிப்பார்க்க அனுமதி இலவசம்!

இன்று ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம். உலகம் முழுவதும் யோகா தினம் சிறப்பாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி விசாகப்பட்டினத்தில் யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதில் ஒரே நேரத்தில் 3,00,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு யோகா செய்து கின்னஸ் சாதனை செய்ய உள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இன்று ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இன்று கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க தொல்லியல்துறை இன்று அனுமதி அளித்துள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பல்வேறு புராதன சின்னங்கள் அமைந்துள்ளன. இவை உலகப்பிரசித்தி பெற்றவை. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். இந்த புராதன சின்னங்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!