அட்ரா சக்க... மகளிர்தின ஸ்பெஷல்... மோடியின் எக்ஸ் தள பக்கத்தில் கையாளும் தமிழக வீராங்கனை... வைஷாலி!

இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள் பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை சிறப்பிக்கும் வகையில் இன்று இந்திய வரலாற்றில் முதன் முறையாக பிரதமர் பாதுகாப்புக்கு பெண் கமேண்டோக்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
Vanakkam!
— Narendra Modi (@narendramodi) March 8, 2025
I am @chessvaishali and I am thrilled to be taking over our PM Thiru @narendramodi Ji’s social media properties and that too on #WomensDay. As many of you would know, I play chess and I feel very proud to be representing our beloved country in many tournaments. pic.twitter.com/LlYTmqE2MQ
இந்த விழாவை முன்னிட்டு இன்று ஒருநாள் மட்டும் தனது சமூக வலைதள பக்கங்களை பெண்கள் கையாள்வார்கள் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று அவரது சமூக வலைதள பக்கங்களை பெண்கள் மட்டுமே. இந்நிலையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள பக்கத்தை தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி இடம் பெற்றுள்ளார். இது குறித்து பிரதமர் மோடியின் எக்ஸ் தள பக்கத்தில்:
அதில், "வணக்கம். நான் வைஷாலி. மகளிர் தினத்தன்று பிரதமர் மோடியின் சமூக வலை தள பக்கத்தை கையகப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களில் பலருக்குத் தெரியும், நான் சதுரங்கம் விளையாடுகிறேன். மேலும் பல போட்டிகளில் நமது அன்பான நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!