மறுபடியும் மொதல்...ல இருந்தா‘கொரோனாவை போல மீண்டும் ஒரு புதிய வைரஸ்...” சீன விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்!
2019 இறுதியில் சீனாவின் வூகாண் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாகி விட்டது. இதில் கோடிக்கணக்கானோர் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டதில் லட்சக்கணக்கானோர் பலியாகினர். அந்த நேரத்தில் உலகம் முழுவதும் அந்தந்த இடத்திலேயே முடங்கியது. கொரோனா பாதிப்பு இப்பொழுது இல்லை என்றாலும், அவ்வபோது கொரோனா போலவே சில வைரஸ் தொற்று பரவுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வயிற்றில் புளியை கரைத்து வருகிறது.

அந்த வகையில், மனிதர்களிடையே பரவும் புதிய வகை கொரோனா வைரஸை தற்போது கண்டறிந்துள்ளதாக சீன வைரஸ் நிபுணர் Shi Zhengli அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை ஏற்படுத்திய வைரஸோடு பல வகைகளில் ஒற்றுமை கொண்டுள்ள இந்த வைரஸுக்கு HKU5 என பெயரிடப்பட்டுள்ளது.
பல வகைகளில் நூற்றுக்கணக்கான கொரோனா வைரஸ்கள் உள்ளன. அவற்றில், SARS, SARS-CoV-2, MERS மற்றும் இன்னும் ஒரு சில வைரஸ்கள் மட்டுமே மனிதர்களைப் பாதிக்கின்றன. சமீபத்திய ஆய்வின் மூலம், ஷி ஜெங்லியின் நிபுணர் குழு, மனிதர்களைப் பாதிக்கக்கூடிய மற்றொரு கொரோனா வைரஸைக் கண்டுபிடித்திருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து சவுத் சைனா மார்னிங் சவுத் போஸ்ட் அறிக்கையின்படி, இந்த வைரஸ் முன்பு ஹாங்காங்கில் ஜப்பானிய பைபிஸ்ட்ரெல் வௌவால்களில் கண்டறியப்பட்டது. இது மார்பெகோவைரஸ் துணை இனத்திலிருந்து வருகிறது. இதில் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (MERS) ஏற்படுத்தும் வைரசும் அடங்கும். இந்த வைரஸ் மனிதர்களிடையே பரவுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது COVID-19 போல ஆபத்தானது அல்ல என்றாலும், தொற்றுநோயை பரவச்செய்யும் வகையில் கடந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பின் வளர்ந்து வரும் நோய்க்கிருமிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

இந்த புதிய வைரஸ், “நேரடி பரவுதல் மூலமாகவோ அல்லது இடைநிலை ஹோஸ்ட்களால் மூலமாகவோ, மனிதர்களுக்கு பரவும் அதிக ஆபத்தை கொண்டுள்ளது. இந்த ஆராய்ச்சியை ஷியின் வுஹான் வைராலஜி நிறுவனம் (WIV), குவாங்சோ ஆய்வகம் மற்றும் குவாங்சோ அறிவியல் அகாடமி இணைந்து நடத்தியுள்ளது.(Shi Zhengli ) ஷி ஜெங்லியின் குழு, HKU5-CoV-2 ஆனது தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த வைரஸின் செயல்திறன் கொரோனா வைரஸை காட்டிலும் மிக மிகக் குறைவு. இதனால் HKU5-CoV-2 மனித மக்களுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படக்கூடாது எனவும் அந்த குழு தெளிவுபடுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
