வேளாண் பட்ஜெட் : தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் உழவர் நல சேவை மையம்!
தமிழகத்தில் மார்ச் 14ம் தேதி வெள்ளிக்கிழமை 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் இன்று மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் காலை 9.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இது தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர், வேளாண்மைக்கு தனியாக தாக்கல் செய்யப்படும் 5வது பட்ஜெட் ஆகும்.
இந்த பட்ஜெட்டில், வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுமா? என்ற கேள்வியுடன் தான் விவசாயிகள் காத்துகிடக்கின்றனர். 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகளை அமைக்க மானியங்கள் வழங்கப்பட்டன. ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்திற்கு ரூ.206 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதே போல் தமிழகம் முழுவதும் 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வேளாண் துறையுடன் கால்நடைத் துறை, மீன்வளத் துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்து பங்கேற்றுள்ளனர்.
உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள் என்பதால் விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
உழவர்களின் வாழ்வில் இந்த நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்புகிறேன் எனக் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினின் செங்கோல் ஆட்சியில் தொழில்கள் பெருகி, பொருளாதாரத்தில் தமிழ்நாடு 2 வது இடம் பிடித்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், மொத்த சாகுபடி பரப்பு 151 லட்சம் ஏக்கராக உயர்வு, 346 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கேழ்வரகு உற்பத்தியில் முதலிடம், நிலக்கடலை உற்பத்தியில் 3 வது இடம், கரும்பு உற்பத்தியில் 2 வது இடம் பெற்றுள்ளது. வளர்ச்சியைக் கூட்டி மலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் வேளாண் நிதிநிலை அறிக்கை இருக்கும்.
1.86 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வேளாண் இயந்திரம் ஆக்குதல் திட்டத்தின் கீழ் ரூ. 510 கோடி செலவில் மானிய விலையில் இயந்திரம் வழங்ப்பட்டுள்ளன.
147 லட்சம் டன் நெல் கொள்முதல்
2021-24 வரை, 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது,
பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்வு
டெல்டா மாவட்டங்களில் நீர் பாசன பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

431 இளைஞர்கள் தொழில் முனைவோர் வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக ஆக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன.
கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு 2 வது இடம் வகித்து வருகிறது. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.841 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகம் போன்று 1000 முதல்வர் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.42 கோடி ஒதுக்கீடு
முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி உயர்த்தி வழங்கப்படும். நிலமற்ற வேளாண் தொழிலாளர்கலுக்கு விபத்து இறப்புக்கான இழப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். இயற்கை இறப்புக்கான நிதி ரூ.20 ஆயிரத்தில் இந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இறுதி சடங்கி நிதி உதவி ரூ.2,500 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
முதல்வர் மன்னுயிர் காப்போம் திட்டம் ரூ.146 கோடியில் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும். கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டம் 2,335 ஊராட்சியில் ரூ.269 கோடியில் செயல்படுத்தப்படும். ஏற்கனவே இந்த திட்டம் 10,157 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
