அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை!! பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!
திண்டுக்கல் மாவட்டம், மாவூத்துப்பட்டி ஊராட்சியில் வசித்து வருபவர் சந்திரபாண்டியன். அதிமுகவில் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 4வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்று கவுன்சிலராக இருந்து வருகிறார். இந்நிலையில், சந்திரபாண்டியன் லிங்கவாடி பகுதியில் தனது மகளை பார்ப்பதற்காக மதுரையை அடுத்த பாலமேடு அருகே தனது டூவிலரில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது வழிமறித்த மர்மகும்பல் ஒன்று அவரை அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது. படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரபாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். தகவல் அறிந்து பாலமேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் பழிக்குப் பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தப்பியோடிய மர்மகும்பலை பாலமேடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!