இளம்பெண்ணிடம் ரூ.30 லட்சம், 15 பவுன் நகைகள் மோசடி... அதிமுக நிர்வாகி கைது.. கட்சியிலிருந்து நீக்கம்!

 
இளம்பெண்ணிடம் ரூ.30 லட்சம், 15 பவுன் நகைகள் மோசடி... அதிமுக நிர்வாகி கைது.. கட்சியிலிருந்து நீக்கம்!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள வாழவந்தான்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜா(38). போலீஸாரின் ரவுடி பட்டியலில் உள்ளார். அதிமுக கலைப் பிரிவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார்.

திருச்சி

இவர் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி இளம்பெண் ஒருவரிடம் இருந்து ரூ.30 லட்சம் மற்றும் 15 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றியதுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீஸார் அண்மையில் ராஜாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஜா மீது நில அபகரிப்பு தொடர்பாக மேலும் ஒரு வழக்கை போலீஸார் பதிவு செய்தனர்.

கைது

இந்நிலையில் ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைத்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், அவருடன் அதிமுகவினர் யாரும் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web