அதிமுகவுக்கு இரண்டு எம்பி சீட் மட்டும் தான்... மல்லுக்கு நிற்கும் தேமுதிக, பாமக… நயினார் நாகேந்திரன் நச் பதில்!
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19ம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில் தமிழகத்திற்கு மொத்தம் 6 மேல் சபை எம்பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்குகிறது. அதன்படி திமுகவை சேர்ந்த வில்சன், சண்முகம் அப்துல்லா, மதிமுக கட்சியை சேர்ந்த வைகோ, அதிமுகவின் சந்திரசேகரன் மற்றும் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் எம்பிக்கான பதவி காலம் முடிவடைகிறது.

ஒரு எம்பி-ஐ தேர்வு செய்வதற்கு மொத்தம் 34 எம்எல்ஏக்கள் தேவை என்பதால் இதில் திமுகவுக்கு 4 எம்பிக்களும், அதிமுகவுக்கு 2 எம்பிகளும் கிடைப்பார்கள். இதில் அதிமுக ஏற்கனவே தேதிமுகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாக வாக்குறுதி கொடுத்ததாக பிரேமலதா விஜயகாந்த் கூறிவருகிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அப்படி எந்தவிதமான வாக்குறுதியும் கொடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவிடம் மாநிலங்களவை எம்.பி சீட் கேட்பீர்களா என்று கேட்கப்பட்டதற்கு இது பற்றி பாஜக தலைமை முடிவு செய்யும். அவர்கள் அதிமுகவிற்கு முழு ஆதரவு கொடுக்க சொன்னால் நாங்கள் கொடுப்போம் . அதே நேரத்தில் அன்புமணி ராமதாாசுக்கும் ஒரு எம்.பி சீட் கொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதாவது முன்பு பாஜக கூட்டணியில் பாமக இருந்ததால் அவருக்கு எம்.பி சீட் கொடுக்க வாய்ப்புள்ளதா எனவும் பேசப்பட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
