இன்று திமுக அரசைக் கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

 
எடப்பாடி
இன்று ஏப்ரல் 15ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றத் தவறியதாக,  கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் , திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு பதவியேற்ற நாளில் இருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்பட்டு வந்த பல்வேறு முத்தான திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு முடக்கியும், நீர்த்துப் போகவும் செய்துள்ளது. இச்செயல் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். ஸ்டாலின் இபிஎஸ்

அந்த வகையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.  மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வரும், விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிலையில், ஓசூர் மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக்  கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பில் நாளை காலை 10 மணியளவில், ஓசூர், ராயக்கோட்டை ரோடு, EB அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி பா. வளர்மதி அவர்கள் தலைமையிலும்; கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. P. பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும். 

ஸ்டாலின் இபிஎஸ்

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், ஒசூர் மாநகராட்சி மாமன்ற இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். 

மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும், ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளும்படி  அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web