அஜித் பவார் மரணத்தில் சந்தேகம்… மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு!
பாராமதி விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தேகம் எழுப்பியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து விலகத் தயார் என அஜித் பவார் கூறியிருந்ததாக அவர் நினைவுபடுத்தினார். அதன் பின்னரே இந்த விபத்து நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆளும் கூட்டணியில் இருக்கும் ஒருவருக்கே இப்படியான நிலை என்றால், எதிர்க்கட்சியினரின் பாதுகாப்பு என்ன ஆகும் என்ற கேள்வியையும் மம்தா பானர்ஜி எழுப்பினார். இந்த சம்பவம் நாட்டின் அரசியல் சூழலில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அஜித் பவார் மரணம் குறித்து முழு உண்மை வெளிவர வேண்டும் என வலியுறுத்திய அவர், உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
