பத்ம பூஷன் விருது பெற குடும்பத்துடன் டெல்லி செல்லும் அஜீத்!

இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தில் அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தியாவில் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு ஜனவரி 25ம் தேதி அறிவித்தது. அதன்படி, தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதில் நடிகரும் கார் ரேசருமான அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த விருது வழங்கும் விழா நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மபூஷன் விருதை அஜித் பெற உள்ளார். இதற்காக அஜித் குமார் இன்று தனது குடும்பத்தினருடன் டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் இருந்து அவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!