அட்சய திருதியை... இந்தப் பொருட்களை வாங்கினால் வீட்டில் சுபிட்சம் நிறையும்!

 
அட்சய திருதியை

நாளை ஏப்ரல் 30ம் தேதி அட்சய திருதியை வரும் நிலையில், தங்கம், வெள்ளி வரிசையில் என்னென்ன பொருட்களை வாங்கினால், வீட்டில் சுபிட்சம் நிறையும் என்று பார்க்கலாம் வாங்க.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அந்த நாளில் குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்பது தான் பலரின் ஆசை. நடப்பாண்டில் செல்வச் செழிப்பை அள்ளித் தரும் தினமான அட்சய திருதியை இன்று ஏப்ரல் 29 ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 05:31 மணிக்கே தொடங்கி விடுகிறது.

இந்த திருதியை திதி ஏப்ரல் 30ம் தேதி பிற்பகல்  2:12 வரை மட்டுமே உள்ளது. திருதியை திதி ஏப்ரல் 30ம் தேதியில் சூரிய உதய காலத்தில் உள்ளதால் அன்றைய தினமே அட்சய திருதியை நாளாக அனுசரிக்கப்படுகிறது.

அட்சய திருதியை
அட்சய திருதியை நாளில் என்ன பொருட்கள் வாங்கினாலும் பெருகும் எனக் கூறுகிறது பவிஷ்ய புராணம்.  பெரும்பாலான மக்கள் இந்த நாளில் தங்கம் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருப்பார்கள். அப்படி தங்கம் வாங்க முடியாதவர்கள் என்னென்ன பொருட்களை வாங்கலாம்.  

அட்சய திருதியை நாளில் வெள்ளிப் பொருட்கள் வாங்கினால் நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் வரவேற்கும்.  வெள்ளி பாத்திரங்கள், நாணயங்கள், நகைகள் அல்லது ஆபரணங்கள் போன்ற பொருட்கள் வாங்கலாம். மேலும் இந்த நாளில் மற்றவர்களுக்கு வெள்ளியைப் பரிசாகவும் வழங்கலாம். 

இந்த நாளில் வாகனங்கள் வாங்குவது பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான பயணத்திற்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலானவர்கள் இந்த தினத்தில் வாகனம் வாங்க ஆர்வம் காட்டுவர். 

தங்கம்: அட்சய திருதியை அன்று தங்க நகைகள் வாங்குவது நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியைக் குறிக்கிறது. வேதங்களின்படி செழிப்பின் தெய்வமான லட்சுமி தேவி இந்நாளில் பிறந்தார். எனவே தங்கத்தில் முதலீடு செய்து செழிப்பை அனுபவிக்க அட்சய திருதியை ஒரு சிறந்த நேரமாக கருதப்படுகிறது.  

அட்சய திருதியை
சொத்து: ஜோதிட மற்றும் வாஸ்து வல்லுநர்கள் அட்சய திருதியையைச் சொத்தில் முதலீடு செய்ய ஒரு அதிர்ஷ்டமான நாளாகக் கருதுகின்றனர். ஏனெனில் இது நீண்டகால வெற்றியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் உறுதி செய்கிறது. தனிநபர்கள் சொத்து பரிவர்த்தனைகளை முடிக்கச் சாதகமான முகூர்த்தத்தை விரும்புகின்றனர்.  நிலம், வீடு மற்றும் பிற சொத்துக்களை வாங்க இது சரியான நாள், எனவே ஒரு திடமான மற்றும் வளமான எதிர்காலத்தைத் தனக்குத்தானே அமைத்துக் கொள்ள இது ஒரு நல்ல நேரமாக கருதப்படுகிறது.   

அட்சய திருதியை அன்று  வீட்டிற்குத் தேவையான சோபா செட் அல்லது டைனிங் டேபிள் போன்ற புதிய மரச்சாமான்களை வாங்கலாம். 

ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் அல்லது புதிய தொலைக்காட்சி போன்ற மின்னணு சாதனங்களையும் அட்சய திருதியை நாளில் வாங்கலாம்.  இந்த நாளில் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும்.

அட்சய திருதியை நாளில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.  பலர் இந்நாளில் பங்குகள் அல்லது மியூட்சுவல் ஃபண்ட்ஸ் வாங்கலாம். அன்றைய நாளில்  செய்யப்படும் முதலீடுகள் நீண்ட கால வருமானத்தைத் தரும் எனக் கருதப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web