மதுபானப்பிரியர்கள் அதிர்ச்சி!! மே 1ம் தேதி டாஸ்மாக் கடைகள் விடுமுறை!!
தமிழகத்தில் மதுபானக் கடைகள், பார்கள் அனைத்தும் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் என பொதுவிடுமுறை தினங்களில் தமிழகத்தில் மதுபானக்கடைகள் மூடப்படுவது வழக்கம். இதேபோல் தேர்தல் நேரங்கள், உள்ளூர் விடுமுறை தினங்களிலும் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும்.
விடுமுறை நாட்களில் தடையை மீறி யாராவது சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், மே தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மே 1ம் தேதி மூடப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் மே தினத்தை முன்னிட்டு, தமிழக மதுபான சில்லறை விற்பனை விதிகளின்கீழ், சென்னையில் உள்ள அனைத்து 'டாஸ்மாக்' கடைகளும், அனைத்து விதமான 'பார்'களும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறுபவர்கள் மீது மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!