அலர்ட்... மே 25ல் உருவாகிறது ‘சக்தி’ புயல்!
மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா கடலோர பகுதிகளில் மே 23ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும், படிப்படியாக அந்த தாழ்வு பகுதி வலுவடைந்து வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மே 25, மே 26ம் தேதிகளில் புயலாக வலுபெறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த புயலுக்கு இந்திய வானிலை மையம் சக்தி Shakthi என்று பெயரிட உள்ளது. இப்புயலின் காரணமாக கேரளா தமிழ்நாடு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை மே 24ம் தேதி துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் மே 25ம் தேதியும், ஆந்திரா தெலுங்கானா ராயல்சீமா உள்ளிட்ட ஒட்டுமொத்த தென் இந்தியாவிலும் மே 28ம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை துவங்க சாதக சூழல் காணப்படுகிறது என தெரிவித்தார்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் விரைவில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது" என வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
