அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களுக்கு அலெர்ட்!!

 
5 மாவட்டங்களில் கன மழை

தமிழகத்தின்  மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக பல மாவட்டங்களில் ஆங்காங்கே தொடர் மழை பெய்து வருகிறது. இன்றும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னல் உடன் கூடிய மழை பெய்யக்கூடும்
இதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்றும்,  நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.  குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியசாக இருக்கலாம். 

மழை

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், நெல்லை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், தருமபுரி, கரூர், பெரம்பலூர், மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அடுத்து 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் , மழை

மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது . இடையில் பெய்த கோடை மழையால் சற்றே தணிந்த வெப்பம் இப்போது உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் 18 பகுதிகளில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு வெயில் படிப்படியாக குறையத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்த செய்திக்குறிப்பில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம் , புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  அதே நேரத்தில் இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் மே 21ம் தேதி வரை தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

அக்னி  நட்சத்திரம் மே 29ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் இன்னும் 2 நாட்களில் சென்னையில் கடற்காற்று மிதந்து வரத் தொடங்கும் என உற்சாகமான செய்தியை வெதர்மேன் வெளியிட்டுள்ளார்.  வெயிலின் தாக்கத்தால் தற்போது இரவு நேரங்களில் அதிக புழுக்கமும் அனலும் அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.   சென்னையை பொறுத்தவரை அனற்காற்றால் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.  காலை 11 மணிக்கு கடல் காற்று வீசியதாகவும், இதனால் சென்னையில் கடலோர நகரங்களில் உள்ள மக்களுக்கு வெயிலில் இருந்து ஓய்வு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web