உஷார்... தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்!

 
வெப்ப அலை
தமிழகத்தில் இன்றும் நாளையும், ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் ஏப்ரல் 14 மற்றும் ஏப்ரல் 15ம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதுடன், ஒருசில இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இன்று ஏப்ரல் 14ம் தேதி அதிகபட்ச வெப்பநிலை 103 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

வெயில்

நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை விமான நிலையத்தில் 101.3, ஈரோட்டில் 101.12 டிகிரி ஃபாரன்ஹீட் என 3 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

வெயில்

ஆந்திர பிரதேச கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று ஏப்ரல் 14ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web