உஷார்... இன்று முதல் ஏசி மின்சார ரயில் சேவையில் முக்கிய மாற்றம்!

இன்று முதல் ஏசி மின்சார ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கான கட்டண விவரமும் வெளியிடப்பட்டது.
அதன்படி சென்னை கோட்டை, சென்னை பார்க், எழும்பூர் ரூ.35, மாம்பலம் ரூ.40, கிண்டி, பரங்கிமலை, திரிசூலம் ரூ.60, தாம்பரம், பெருங்களத்தூர் ரூ.85, கூடுவாஞ்சேரி, பொத்தேரி ரூ.90, சிங்கபெருமாள்கோயில் ரூ.100, பரனூர், செங்கல்பட்டு ரூ.105 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏசி மின்சார ரயிலில் பல வசதிகள் இருந்தாலும், கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும், இந்த ரயில் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பயணிகளிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்தது. இதனையடுத்து ஏசி மின்சார ரயில் கால அட்டவணை இன்று முதல் அதாவது மே 2ம் தேதி முதல் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புறநகர் ஏசி மின்சார ரயில்கள் தாம்பரத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காலை 7.35 மணிக்கு செங்கல்பட்டுக்கு வந்து சேரும், செங்கல்பட்டு ஜங்ஷனில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு 9.25 மணிக்கு சென்னை பீச் வந்தடையும், கடற்கரையில் இருந்து 9.41 மணிக்கு புறப்பட்டு 10.36 மணிக்கு தாம்பரம் செல்லும், மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு 1.55 மணிக்கு பீச் ரயில் நிலையம் வந்து அடையும்.
பீச் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு செங்கல்பட்டு சென்று சேரும். செங்கல்பட்டில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு மாலை 6. 00 மணிக்கு வந்தடையும், சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6.17 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டுக்கு இரவு 7:50 மணிக்கு வந்தடையும், செங்கல்பட்டில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்திற்கு இரவு 8.50 மணிக்கு வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!