உஷார்... இன்று முதல் ரயில்கள் முன்பதிவு, ரத்து விதிமுறைகளில் முக்கிய மாற்றம்!

 
ரயில் கூட்டம் வெளியூர் செண்ட்ரல்

இன்று மே 1ம் தேதி முதல் ரயில் முன்பதிவு விதிமுறைகளில் மாற்றங்கள் அமலுக்கு வருகிறது. ரயில்வே அமைச்சகம் டிக்கெட் முன்பதிவு துறையில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் முன்பதிவு, தட்கல் டிக்கெட் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறும் விதிகளில் தெளிவான முறையை எதிர்பார்க்கலாம்.

முன்னதாக ஒவ்வொரு ரயிலுக்கும் தனித்தனி முன்பதிவு காலம் இருந்தது. இது பயணிகளை பெரிதும் குழப்பத்துக்கு உள்ளாக்கியது. ஆனால் இனி அப்படி இல்லாமல் இன்று மே 1ம் தேதி முதல் அனைத்து ரயில்களுக்கும் ஒரே மாதிரியான 120 நாள் முன்பதிவு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 சிறப்பு ரயில்

இது மெயில் ரயிலாக இருந்தாலும், எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர்ஃபாஸ்ட் ரயிலாக இருந்தாலும் பொருந்தும். இதன் மூலம் பயண திட்டங்களைச் சீராக அமைத்துக் கொள்ளும் வசதியை பெறலாம்.  அதே போல் தட்கல் டிக்கெட்டுகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏசி வகைகளுக்கான தட்கல் முன்பதிவு காலை 10 மணிக்கும், ஸ்லீப்பர் வகைக்கு காலை 11 மணிக்கும் தொடங்கும். மேலும், ஒரு பயனர் ஐடியால் ஒரு நாளில் அதிகபட்சம் இரண்டு தட்கல் டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். எந்த ரயிலிலும் 30 சதவீத இருக்கைகள்  தட்கல் இடங்களுக்கு ஒதுக்கப்படும்.

ரயில்

பணத்தை திரும்பப்பெறும் விதிகளும் இப்போது தெளிவாக அமைக்கப்பட்டுள்ளன. 48 மணி நேரத்துக்கு மேலாக முன்பே ரத்து செய்தால் 75 சதவீத பணம் திரும்ப கிடைக்கும். 24 முதல் 48 மணி நேர இடைவெளிக்குள் ரத்து செய்தால் 50 சதவீதம் மட்டுமே திரும்பும். 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் எந்தத் தொகையும் கிடையாது. உறுதிபெறாத காத்திருப்பு டிக்கெட்டுகளுக்கு முழு பணம் திரும்பக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web