உஷார்... வீட்டு வேலைச் செய்து வந்த பெண்கள் கொள்ளையடித்த அதிர்ச்சி!

வீட்டு வேலைக்குப் பணிக்கு அமர்த்துபவர்கள் உஷாராக இருங்க. சென்னை துரைப்பாக்கத்தில் மேட்டுகுப்பம் பி டி சி சாலை, பல்லவன் குடியிருப்பில் தங்கியிருந்தபடியே தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணி புரிந்து வருபவர் டில்லி பாபு(33).
இவர் எப்போதும் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது, வழக்கமாக தனது வீட்டின் கதவுக்கு வெளியே ஷூவுக்கு அடியில் சாவியை வைத்து விட்டுச் செல்வது வழக்கம் . சம்பவம் நடந்த அன்று வழக்கம் போல் சாவியை ஷீவில் வைத்து விட்டு வெளியே சென்றுள்ளார். இவரது மனைவியும் விட்டில் இல்லை வெளியே சென்றிருக்கிறார் .
வெளியே சென்ற மனைவி வீட்டிற்கு வந்ததும் வீட்டின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தாள். பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் கொள்ளைப் போனதைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தால்.கண்ணகி நகர் போலீசார் இது குறித்து விசாரனை நடத்தினார்.
விசாரணையில், வீட்டின் அருகில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்த நிலையில், போலீசாரின் விசாரணையில் துரைபாக்கத்தை சேர்ந்த மீனா, ரம்யா, கஸ்தூரி, கலைவாணி ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரிய வந்துள்ளது.
இவர்கள் டில்லி பாபுவின் வீட்டில் வேலை செய்து வந்ததும், அவர் சாவியை அங்கே வைப்பதையும் நோட்டமிட்டுள்ளனர். கொள்ளையர்களின் வீட்டிலிருந்து 19 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்த போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!