உஷார்... நோட் பண்ணிக்கோங்க... தென்மாவட்டங்களுக்கான எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்!

சேலம் ரயில்வே கோட்டத்தில் கோவை மற்றும் போத்தனூர் பிரிவுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலக்காடு - திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16844) மே 10, 11, 12, 13, 14, 15 தேதிகளில் காலை 6.30 மணிக்கு புறப்படும் ரயில் கோவை ஜங்ஷன், கோவை வடக்கு மற்றும் பீளமேடு வழியாக செல்லாமல் மாற்றுப்பாதையில் போத்தனூர் மற்றும் இருகூர் வழியாக திருச்சிக்கு வந்தடைகிறது.
மேலும் மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள புங்குடி யார்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அந்த வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
அதன்படி செங்கோட்டையில் இருந்த காலை 6.55 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16848) நாளை (வெள்ளிக்கிழமை) கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை ஜங்ஷன், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, மணப்பாறை வழியாக செல்லாமல் மாற்றுப்பாதையில் விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருச்சி வழியாக மயிலாடுதுறைக்கு சென்றடைகிறது.
இதே போல், கன்னியாகுமரியில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி - சார்லபள்ளி கோடைக்கால சிறப்பு ரயில் நாளை (வெள்ளிக்கிழமை) மதுரை ஜங்ஷன், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் வழியாக செல்லாமல் மாற்றுப்பாதையில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். இந்த தகவலை திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!