உஷார்... மே 12ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும்... என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகள்!?

மே 12ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் வெயில் சதத்தைக் கடந்து மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், நாளை மறுநாள் முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. இந்த கத்திரி வெயில் காலத்தில் இன்னும் உஷ்ணம் எவ்வளவு உயருமோ என்று மக்கள் இப்போதில் இருந்தே பயத்தில் உள்ளனர்.
இந்நிலையில் மே 12ம் தேதி வரையில் பொதுமக்கள் முடிந்த வரையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என குடிமைப் பாதுகாப்பு இயக்குநரகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 10 மனி முதல் பிற்பகல் 3 மணி வரையில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த 14 நாட்களும் வெயிலின் தாக்கம் 45 டிகிரி செல்சியஸ் முதல் 55 டிகிரி செல்சியஸ் வரையில் கூடுதலாக இருக்கும்.
ஆகையால் யாரேனும் மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ உடனடியாக மருத்துவர அணுகி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெயிலின் தாக்கம் குறைய எப்போதும் வீட்டில் இருக்கும் வீட்டு கதவை திறந்தே வைக்க வேண்டும்.
மொபைலை சார்ஜ் போட்டபடி பயன்படுத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அறையின் வெப்பநிலை காரணமாக ஏற்கனவே உங்களது மொபைல் சூடாக இருக்கும்.
அப்படியிருக்கும் போது சார்ஜ் போடும் போது கூடுதல் வெப்பம் காரணமாக மொபைல் வெடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்து வருகிறது. வெயிலின் பாதிப்பிலிருந்து தப்பிக்க பழச்சாறு, மோர், நீர் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
எளிதில் பற்றக் கூடிய இவற்றையெல்லாம் காரில் வைக்க கூடாது:
1. எரிவாயு பொருட்கள்
2. லைட்டர்கள்
3. கார்பனேற்றப்பட்ட பானங்கள்
4. வாசனை திரவியங்கள்
5. பேட்டரிகள்
6. காரில் பெட்ரோல் அல்லது டீசலை முழுவதுமாக நிரப்ப கூடாது.
7. காலை நேரங்களில் கார் பயணங்களை தவிர்ப்பது நல்லது
8. கார் டயரில் அதிக காற்று நிரப்ப கூடாது.
9. கார் ஜன்னல்கள் கொஞ்சம் திறந்திருக்க வேண்டும்.
அதிக வெயிலின் தாக்கம் காரணமாக ஊர்வன வகையைச் சேர்ந்த தேள், பாம்பு ஆகியவை நீர் நிலைகளை தேடி வெளியில் செல்லும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். எரிவாயு சிலிண்டரை வெயிலில் வைக்க கூடாது. எரிவாயு சிலிண்டரை வெயிலில் வைக்க கூடாது.
மின் மீட்டர்களை அதிகமாக பயன்படுத்தக் கூடாது. வீட்டில் தேவைக்கேற்ப மட்டும் ஏசியை பயன்படுத்த வேண்டும். ஏசியை வீட்டில் 24-25 டிகிரி செல்சியசில் வைத்திருக்க வேண்டும். உங்களது உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!