உஷார்... கல்யாணமான ரெண்டே வாரத்துல நகைகளை சுருட்டிக் கொண்டு ஓடிய இளம் மனைவி!

கல்யாணமான ரெண்டே வாரத்துல, கணவன் மற்றும் புகுந்த வீட்டினரின் நம்பிக்கையைப் பெற்று, வீட்டிலிருந்த ரூ.30,000 ரொக்கம் மற்றும் தங்க நகைகள், செல்போன் ஆகியவற்றை சுருட்டிக் கொண்டு புதுமணப்பெண் கம்பி நீட்டி ஓட்டம் பிடித்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் விஷ்ணு சர்மா. இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணத்திற்கு வரன் பார்த்து வந்த நிலையில் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனுராதா என்பவரை கடந்த ஏப்ரல் 20ம் தேதி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணம் முடிந்த பின் அனுராதா விஷ்ணு சர்மாவின் வீட்டில் வாழ்ந்து வந்தார்.
அப்போது ஒரு நாள் இரவு நேரத்தில் குடும்பத்தினர் அனைவருக்கும் உணவு சமைத்து பரிமாறி உள்ளார்.அதனை சாப்பிட்ட குடும்பத்தினர்கள் அனைவரும் மயக்கம் அடைந்தனர். இந்நிலையில் அனுராதா வீட்டில் இருந்த ரூ.30000 ரொக்கம், தங்க நகைகள் மற்றும் மொபைல் போன் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
அதன்பின் விஷ்ணு காலையில் எழுந்து பார்த்தபோது அனுராதா காணாமல் போனது தெரிய வந்தது. அத்துடன் வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் காணாமல் போனதால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அனுராதா மற்றும் அவருக்கு உதவிய நபர்களை கைது செய்துள்ளனர். அனுராதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உணவில் மருந்து கலந்ததால் குடும்பத்தினர் அனைவரும் மயக்கமடைந்த நிலையில் நகை, பணம், மொபைல் போன்கள் ஆகியவற்றை திருடியது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து விஷ்ணு சர்மா ரூ. 2லட்சம் கடன் வாங்கி இந்த திருமணத்தை நடத்தியதாகவும் திருமணம் நடந்த 14 நாட்களில் தன் மனைவி இப்படி செய்வார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. அனுராதா அவருடைய உறவினர் சுனிதா யாதவ் மற்றும் சியாம் ராஜ்பூத் ஆகியோரின் உதவியுடன் திட்டமிட்டு இதனை செய்துள்ளார் என்றும், தான் இப்போது கடனில் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!