3 நாட்கள் அனைத்து அரசு விழாக்களும் ரத்து... கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி!

 
கோவா
 


 
கோவா மாநிலம் ஷிர்காவோவில்  ஸ்ரீ தேவி லைராய் கோவில்  அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெற்ற வருடாந்திர திருவிழாவில், திடீர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.இந்த திருவிழாவிற்காக இன்று மே 3ம் தேதி சனிக்கிழமை அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் கூட்டமாக  கூடியிருந்தனர். குறுகிய வழித்தடங்களில் ஏற்பட்ட நெரிசலில், மக்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து இந்த சோகம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவத்தின் பின், கோவா அரசு உயிரிழந்தோர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில்  அரசு ஆதரவுடன் நடத்தப்படும் அனைத்து விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது.  
இதுகுறித்து பொது நிர்வாகத் துறையின் துணைச் செயலாளர் ஷ்ரேயாஸ் டி சில்வா வெளியிட்ட சுற்றறிக்கையில், அனைத்து அரசுத் துறை அதிகாரிகள், நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் கண்டிப்பாக இதனை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். திருவிழாவில் சுமார் 30,000 முதல் 40,000 பேர் வரை கலந்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவா

கோவா காவல் துறை இயக்குநர் அலோக் குமார் , “கோயில் பகுதியில் இருந்த சரிவில் ஏறத்தாழ 40–50 பேர் விழுந்தனர். இதுவே நெரிசலை உருவாக்கி, பல உயிர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது” இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் தவிர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web