“காங்கிரஸ் இல்லாமல் கூட்டணிக் கட்சிகள் ஜெயிக்க முடியாது” - முன்னாள் எம்.பி., பேச்சு!

காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் கூட்டணிக் கட்சிகள் ஜெயிக்க முடியாது என கோவில்பட்டியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு பேசினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வட்டார, நகர, கிராம காங்கிரஸ் கமிட்டி வார்டு மறு சீரமைப்பு பணிகளுக்கான ஆய்வு கூட்டம் கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. தூத்துக்குடி பாராளுமன்ற பொறுப்பாளர் வழக்கறிஞர்மகேந்திரன் தலைமை வகித்தார் மாவட்ட பார்வையாளர் காமராஜ், பொன் சக்தி மோகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு கலந்து கொண்டு மறு சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசுகையில் "காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் கட்சியை தூக்கிப் பிடிக்க முடியும். எல்லா இடத்திலும் காங்கிரசுக்கு என்று வாக்கு வங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி இல்லாமல் கூட்டணிக் கட்சிகள் ஜெயிக்க முடியாது. இதை எல்லோரும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும், காங்கிரசுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர்.
உங்கள் கட்சியில் செயல்வீரர்கள் உள்ளார்களா என்று மக்கள் கேட்கின்றனர். ஆகையால் அது நாம் உருவாக்க வேண்டும். கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் உருவாக்க முடியும், நாலு பேர் நம்மைப் பார்த்து என்னைக்கு வந்தீர்கள் என்று கேட்பார்கள், கேட்கத்தான் செய்வார்கள். ஏனெனில் நாம் கூட்டணியோடு ஓடிக் கொண்டிருப்பதால் நம்மை கேட்கின்றனர். தனியாக நின்று வெற்றி பெற்றிருந்தால் கேள்வி கேட்க மாட்டார்கள். காங்கிரஸ் வலுவான கட்சியாகத்தான் இருக்கிறது. கட்சியின் அடிப்படைகளை சரி செய்ய வேண்டும் நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என்றார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!