சுபமுகூர்த்தம்... இன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் !

தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சுபமுகூர்த்த நாட்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பதிவுத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், மாசி மாதத்தில் இன்று மார்ச் 12ம் தேதி புதன்கிழமை கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும். சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்படும்.
அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!