மார்ச் 5ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்... முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க வரும் மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று பிப்ரவரி 25ம் தேதி காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பேட்டியளித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்களவைத் தொகுதிகளைக் குறைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழகத்தில் 31 மக்களவைத் தொகுதிகள்தான் இருக்கும், 8 தொகுதிகளை இழக்க நேரிடும். இது தொடர்பாக அரசியல் கடந்து அனைத்துக் கட்சியினரும் குரல் கொடுக்க வேண்டும்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
