1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல்பாஸ்!! மாணவர்கள் உற்சாகம்!!

 
விடுமுறை

 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் முழு ஆண்டு தேர்வுக்கான தேதிகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி  மற்றும் காரைக்காலில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் நடப்பாண்டின் முழு ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விடுமுறை
புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு கடந்த 11ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும்  தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

விடுமுறை


9ம் வகுப்பு வகுப்பு மாணவர்கள் 35% மதிப்பெண் பெற்று இருந்ததால் தேர்ச்சி எனவும் 1 முதல் 9ம் வகுப்புக்கான தேர்ச்சி பட்டியலை கல்வித்துறைக்கு மே 8ம் தேதிக்குள் அனைத்து பள்ளி முதல்வர்களும் அனுப்ப வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று முதல்  மே 31ம் தேதி வரை   புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கோடை விடுமுறை தொடங்கப்பட்டுள்ளது.  ஜூன் 1ம் தேதி  முதல் மீண்டும் பள்ளிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web