“நான் தேச துரோகியா...? என் நேர்மையையும் நாட்டுப்பற்றையும் கேள்விக்குறியாக்காதீங்க...” இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா வேதனை !

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி செவ்வாய்க்கிழமை பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானைச் சேர்ந்த தடகள வீரர் அர்ஷத் நதீமை மே மாதம் பெங்களூருவில் நடைபெறும் ‘நீரஜ் சோப்ரா கிளாசிக்’ போட்டிக்கு அழைத்தார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் மிகக் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இதனால் ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரர் நீரஜ் சோப்ரா “ தாம் அனுப்பிய அழைப்புகள் தாக்குதலுக்கு முன்பே அனுப்பப்பட்டவை , அது ஒரு தடகள வீரருக்கு மற்றொருவர் அனுப்பிய அழைப்பாக மட்டுமே பார்க்க வேண்டியது என பதிவிட்டுள்ளார்.
“இந்த அழைப்பு எனது சொந்த முடிவாக இருந்தாலும், அர்ஷத்தின் வருகை குறித்து பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நிலைமைகள் முற்றிலும் மாறிவிட்டன. எனது நாடும் அதன் பாதுகாப்பும் தான் எப்போதும் என் முன்னுரிமையாக இருக்கும்,” என நீரஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தனது குடும்பத்தினரையும் சமூக வலைதளங்களில் குறிவைத்தது வேதனையளிப்பதாகவும், தம்மை எப்போதும் எளிய மனிதர்கள் போல் வெறுப்பு இல்லாமல் அணுக வேண்டும் எனவும் கூறியுள்ளார். “ஒரு விளையாட்டு போட்டியில் அனைத்து சிறந்த தடகள வீரர்களையும் அழைக்கும் முயற்சியாகத்தான் இது ஆரம்பிக்கப்பட்டது,” எனவும் விளக்கியுள்ளார்.
நீரஜ் சோப்ரா குறித்து சில ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. கடந்த வருடம் என் அம்மாவை புகழ்ந்தவர்கள் தற்போது என் தாயை மிகவும் மோசமாக விமர்சிக்கிறார்கள். இதனை பார்க்கும்போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. “நான் என் நாட்டின் மரியாதைக்காக தொடர்ந்து உழைப்பேன். இந்தியா சரியான காரணங்களுக்காக உலக அரங்கில் மரியாதை பெறவேண்டும். என் நேர்மையையும் நாட்டுப்பற்றையும் கேள்விக்குறியாக்காதீர்கள் “ என தனது பதிவில் கூறியுள்ளார். இது குறித்து ‘நீரஜ் சோப்ரா கிளாசிக்’ போட்டிக்குள் அர்ஷத் நதீம் பங்கேற்பு குறித்து பாதுகாப்பு சூழ்நிலைகளின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!