"நான் துணை முதல்வரா?”... பதறிய செல்வப்பெருந்தகை... உடனே கிளம்பி வாங்க... ஆவேசமாக உத்தரவு!

2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக விசிகவில் ஆதவ் அர்ஜுனா இருந்த போது இந்த முழக்கம் அதிகமாகவே எதிரொலித்தது. அதன் பின்னர் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது தனிக்கதை.
அதன் பின்னர் விஜய் தவெகவின் பெரிய பலமாக ஆட்சியில் பங்கு என்பதை அறிவித்ததும் மீண்டும் தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. விசிக, காங்கிரஸ், பாமக, பாஜக ஆகிய கட்சிகள் இந்த முழக்கத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மாநிலச் செயலாளர் ஷெரிப், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பேருந்தைக்கு ஒட்டிய பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரில் ‘ 2026 துணை முதலமைச்சர்’ என பதிவிட்டு பதற்றத்தை கிளப்பியுள்ளார்.
அந்த போஸ்டரில், ” ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ ஏப்ரல் 14ல் பிறந்தநாள் காணும் 2026ன் துணை முதல்வரே ” என பதிவிட்டுள்ளனர்.
இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, ஒற்றுமையாக இருக்கும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் நோக்கில் இந்த போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த போஸ்டர் ஒட்டியது தொடர்பாக மாநிலச் செயலாளர் ஷெரிப் அடுத்த 15 நாட்களுக்குள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும். நீங்கள் தரும் விளக்கம் தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒழுஙகு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!