அம்மாடியோவ்...!! 5 ஆண்டு ஊதியம் போனஸ்!! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்!!
சர்வதேச அளவில் கடல்வழி வணிகத்தில் மிகச் சிறந்து விளங்கும் நிறுவனங்களில் ஒன்று எவர்கிரீன் நிறுவனம். இந்நிறுவனம் கொரோனா காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் அதன் பங்குகள் விலை 250 சதவீதம் அதிகரித்தது. இதனால் அந்நிறுவனம் பல மடங்கு லாபத்தை ஈட்டியுள்ளது. இதனை தனது ஊழியர்களுடன் கொண்டாடும் வகையில் தனது ஊழியர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 52 மாத சம்பளத்தை போனஸாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைவான் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற கப்பல் நிறுவனம் எவர்கிரீன் மரைன் கார்ப்பரேஷன் .
இந்நிறுவனம் கடல்வழி வணிகத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த நிறுவனம் கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதால் அதன் பங்குகள் 250% அதிகரித்தது. இதனால் கடந்த நிதி ஆண்டில் சுமார் 16.25 பில்லியன் டாலர் வரை நிகர லாபம் ஈட்டியது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ1.98 லட்சம் கோடி .இதனை ஊழியர்களுடன் கொண்டாடும் வகையில் மிகப்பெரிய போனஸ் அறிவிப்பினை தற்போது இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் அந்த நிறுவனத்தில் பணிபுரிய அனைத்து ஊழியர்களும் பயன் அடைந்துள்ளனர். பணியில் சேர்ந்து ஓராண்டு மட்டும் நிறைவு செய்த ஊழியர்களுக்கு கூட 4 ஆண்டுகளுக்கான போனஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாதம் ரூ.45,000 சம்பளம் பெறும் ஊழியர் கூட ரூ60 லட்சம் வரை போனஸ் பெறுவர்.
அதே நிறுவனத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்கள், பணியாளர்கள் கோடிக்கணக்கில் போனஸ் தொகையை பெற்றிருப்பர். எவர்கிரீன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவன ஈர்ப்பு பெற்றுள்ளது. மற்ற நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இந்தச் செய்தியை அறிந்து வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த போனஸ் அறிவிப்பு எப்படியாவது இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆவலையும் பலருக்கும் ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் 2021லும் 40 மாத சம்பளத்தை போனஸ் தொகையாக வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க