7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. சத்தம் போட்டதால் கத்தியால் குத்திய கொடூரம்.. இளைஞர் வெறிச்செயல்..!!

 
தாமஸ்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் மகன் அஷ்வின்குமார் (7). சிறுவன் நேற்று (10.01.2024) காலை 9 மணியளவில் கடலோர காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள அவனது வீட்டில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டான். முன்னதாக அவர் மர்மமான முறையில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இதையடுத்து, சூரங்குடி போலீஸார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடத்தி வந்தனர்.

Vilathikulam, Thoothukkudi : விளாத்திகுளம்: சூரங்குடி காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட பகுதியில் கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவர் கைது  ...

விசாரணையில், வேம்பார் கிராமத்தைச் சேர்ந்த தாமஸ் (19) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளியை பிடித்து விசாரணை நடத்தினர். குடிபோதையில் இருந்த தாமஸ், வீட்டுக்குள் தனியாக இருந்த 7 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. வீட்டில் சிறுவனின் அலறல் சத்தத்தால் ஆத்திரமடைந்த தாமஸ், தன்னிடமிருந்த சிறிய கத்தியால் சிறுவன் அஸ்வின்குமாரை கொடூரமாக கொன்றுவிட்டு ஓடியதாக கூறப்படுகிறது.

மேலும், சூரங்குடி காவல் நிலைய போலீஸார் தாமஸை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தாமஸ் மீனவர் என்றும், எப்போதும் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது சிறுவன் அஸ்வின்குமாரின் பிரேதப் பரிசோதனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகே சிறுவன் கொலைக்கான பின்னணி முழுமையாக தெரியவரும் என சூரங்குடி காவல் நிலையம் தெரிவித்துள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web