தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ! ஓட்டுனர் பலி! 7 மாணவிகள் படுகாயம்!

 
ஆட்டோ விபத்து

பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுனர்கள் கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டியது அவசியம் என  பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான பெருமளவில் கட்டுப்பாடுகளும், செயல்பாடுகளும் அரசு மற்றும் பள்ளி நிர்வாகங்கள் , பெற்றோர்கள் மூலமும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் வாகன ஓட்டுனர்கள் கவனக்குறைவு, எதிர்பாராத அசம்பாவிதங்கள் காரணமாக விபத்துக்கள் ஏற்பட்டு விடுகின்றன.

விபத்து

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 7க்கும் மேற்பட்ட  பள்ளி மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

ஆம்புலன்ஸ்

இந்த விசாரணையில் வழக்கமான பாதையில்  ஆட்டோ சென்று கொண்டிருந்த போது, திடீரென ஆட்டோவின் குறுக்கே காட்டுப்பன்றி வந்ததால், ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளிக்கு சென்ற மாணவிகள் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கேட்டறிந்த பெற்றோர்கள் அலறித் துடித்தபடி மருத்துவமனை வாசலுக்கு விரைந்து வந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web