ப்ளீஸ்... தமிழ்நாட்டின் கல்வி அமைப்பை மாற்றாதீங்க... அமைச்சர் அன்பில் மகேஷ்!

 
அன்பில் மகேஷ்
 மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டின் கல்விமுறையை சீர்குலைத்து விடும் என  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாட்டின் கல்விமுறை ஏற்கனவே சிறந்த தொழில்முனைவோர், சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி வருகிறது.

அன்பில் மகேஷ்

சிறப்பாக உள்ள தமிழ்நாட்டின் கல்விமுறையை தேசிய கல்விக் கொள்கை சீர்குலைத்து விடுகிறது. இருமொழி கொள்கையையே தமிழ்நாடு பின்பற்ற விரும்புகிறது. தேசிய கல்விக்கொள்கையில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விமர்சிப்பது தவறான வழிநடத்துதலாகும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாடு பாடத்திட்டம் மிகச் சிறந்த பலனை அளித்துள்ளது. உடைந்ததை ஒட்ட வைக்க நினைக்காதீர்கள்.

தர்மேந்திர பிரதான்


நன்றாக செயல்படும் தமிழ்நாட்டின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம். "தமிழ்நாட்டில் 1.09 கோடி மாணவர்கள் 58,779 பள்ளிகளில் மாநில பாடத்திட்ட கல்வியை தேர்வு செய்துள்ளனர். 1,635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே மும்மொழியை படித்து வருகின்றனர். 3வது மொழியை படிக்க அவசியம் இருந்தால், ஏன் இவ்வளவு பேர் மாநில பாடத்திட்டத்தை தேர்வு செய்துள்ளனர் என கேள்வி எழுப்பியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web