அடப்பாவி... ஸ்டார்ட் ஆகலை... நேரமாச்சு... ஆத்திரத்துல் டூ வீலரை பெட்ரோல் ஊற்றி எரித்த குடிமகன்!

 
டாஸ்மாக்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சர்வராஜன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவர், சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக காட்டுமன்னார்கோவிலில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்குவதற்காக பைக்கில் சென்றார். இவர் தனது இருசக்கர மோட்டார் வாகனத்தில் சென்றபோது அது வீரநத்தம் பகுதி அருகே திடீரென பழுதாகி நின்று விட்டது.

டாஸ்மாக்

பலமுறை பைக்கை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தும், ஸ்டார்ட் ஆகவில்லை. அவரது இருசக்கர மோட்டார் வாகனம் ஸ்டார்ட் ஆகாததால் அவருக்கு ஆத்திரம் தலைக்கேறியுள்ளது. அதனால் கடுப்பான அவர் தனது இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து, அதனை நடுரோட்டில் வைத்து தனது இருசக்கர வாகனத்தில் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

டாஸ்மாக்

இதனால் வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது.அவ்வாறு இளைஞர் இருசக்கர வாகனத்தை கொளுத்தியதால் அந்த சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து, குமராட்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் செல்லும் வழியில் பைக் பழுதாகி நின்ற ஆத்திரத்தில் பைக்கை இளைஞர் தீவைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் வைரலாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web