தமிழகம் முழுவதும் ஏப்ரல் 7ம் தேதி நடைபெற இருந்த ஆண்டு தேர்வு ஒத்தி வைப்பு... பள்ளிக்கல்வித் துறை திடீர் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் மாநில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை ஏப்ரல் 7ம் தேதி முதல் ஆண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் ஏப்ரல் 17ம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் கடும் வெயில் காரணமாக பொதுத்தேர்வை முன்கூட்டியே முடிக்க பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு வந்தது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆழித்தேர் திருவிழா ஏப்ரல் 7ம் தேதி நடைபெற உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற தேர் திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு அன்றைய தினம் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 7ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும் இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 7ம் தேதி வழக்கம் போல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். இதற்கு மாறாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 7ம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆண்டு தேர்வு மறுநாளான ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?
