நவம்பர் 22ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி
 

வங்கக்கடலில் நவம்பர் 22-ஆம் தேதி மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதே நேரத்தில், தென் இலங்கை கடலோரத்திற்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் மெல்ல நகர்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று கடலோர மாவட்டங்களில் பல இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னை உட்பட வடதமிழகப் பகுதிகளில் மேகமூட்டம் நிலவிய நிலையில் மழை சாத்தியம் தொடர்கிறது.

புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

மேலும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 21, 22-ஆம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 22-ஆம் தேதி உருவாகும் புதிய தாழ்வு பகுதி மேற்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!