இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு! 10ம் வகுப்பு மாணவர்களே... மிஸ் பண்ணாதீங்க!

நேற்று மே 21ம் தேதி வெள்ளிக்கிழமை 10ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. தமிழகம் முழுவதும் மொத்தம் 9,14,320 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 835614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 91.31 சதவீதமாக பதிவாகியுள்ளது.இதில் மாணவிகள் 94.66 சதவீதம் மாணவர்கள் 88.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இன்று முதல் பாலிடெக்னிக் தொழில்நுட்ப படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.
அதன்படி பாலிடெக்னிக் பட்டய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் பட்டய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க http://tnpoly.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் பாலிடெக்னிக் படிப்புகளில் நேரடியாக 2ம் ஆண்டு சேரவும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்திலும், சிவகங்கை மாவட்டம் 2ம் இடத்திலும், விருதுநகர் மாவட்டம் 3 ம் இடத்தையும் பிடித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 23,971 மாணவ-மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர். இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு எழுத துணைத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த துணை தேர்வில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உடனடியாக தாங்கள் படித்த பள்ளிகள் அல்லது தேர்வு மையத்தை அணுகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!