உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு... கலெக்டர் அறிவிப்பு!

காலிபணியிடம்: 1 (ஒன்று). கல்வித் தகுதிகள் 12-ம் வகுப்பு தேர்ச்சி, கணினி படிப்பில் டிப்ளமோ / சான்று பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த ஒப்பந்த பணியானது முற்றிலும் தற்காலிகமானது. மாதம் ரூ.13,240/- மட்டும் தொகுப்பூதியம் வழங்கப்படும். வேறு எந்த படியும் பெற தகுதியில்லை. அரசிடமிருந்து ஆணை கிடைக்கப் பெற்ற பின்னரே தொகுப்பூதியம் வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படும் இப்பணியாளர், அரசுப்பணி என உரிமை கோர தகுதியில்லை.
இந்த ஒப்பந்தமானது எந்தவித முன்னறிவிப்போ, காரணமோ இன்றி எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை https://tirunelveli.nic.in என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கான படிவத்தினை பூர்த்தி செய்து 6.05.2025 அன்றுக்குள் கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கபெறுமாறு விண்ணப்பிக்கலாம். குறித்த தேதிக்கு பின்னர் தாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கொக்கிரக்குளம், திருநெல்வேலி -9 என்ற முகவரியில் அனுப்ப வேண்டும். மேலும், கூடுதல் விபரங்களை 0462-2901953 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.சுகுமார், தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!