நாளை முதல் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நாளை மே 7ம் தேதி முதல், தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2024-25 கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் சேர நாளை, மே 7ம் தேதி முதல் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொறியியல் விண்ணப்பப் பதிவு மே 7ம் தேதி தொடங்கி ஜூன் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்பின்னர் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவினை அமைச்சர் கோவி.செழியன் இன்று தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!