தமிழகம் முழுவதும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்... அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் 425 மருந்தாளுநா் பணியிடங்கள்!

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 425 மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பப் பதிவு இன்று பிப்ரவரி 17ம் தேதி திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ளது.
அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுநா் பணியிடங்கள் மருத்துவ பணியாளா் தோ்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான நபா்கள் மாா்ச் 10ம் தேதி வரை இணையதளத்தில் தங்களது விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.500, மற்றவா்களுக்கு ரூ.1,000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மருத்துவ பணியாளா் தோ்வு வாரிய இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!